Friday, 27 September 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி-1

பாம்பாட்டி சித்தர்


     இவர் சட்டை முனி யின் சீடராக கருதப்படுகிறார்், சட்டைை முனியின் தூண்டுதலின் பேரிலேயே இவர் உலக மாயையில் இருந்து சித்த சன்மார்கத்தை வழியைை அடைந்தார் என்று போகர் கூறுகிறார். 

    அஷ்ட்ட சித்திகளை் பெற்ற பின்பு இறந்த ஒரு குறுநில மன்னனின் உடலினுள் சென்று அம்மன்னனின் ஆத்மாவை பரகாய பிரவேசமுறையில் பாம்புு ஒன்றினுள் இருக்க செய்ததால். 
பாம்பாக மாறிய அந்த அரசன் தனது ஆசைகள் பூர்த்தி அடையாதவனாக அங்கும் இங்கும் திரிய சித்தர் பெருமான் இவ்வுலக மாயை பற்றி தெளிவான பொருளுடன் 129 பாடல்கள் அடங்கிய சதகத்தை பாடினார்.

அந்த சதகம் ஆனது

1. கடவுுள் வணக்கம்
2.குருவணக்கம்
3.பாம்பின் சிறப்பு
4.சித்தர் வல்லபம்
5.சித்தர் சம்வாதம்
6.பொருள் ஆசைை விலக்கல்
7.பெண்ணாசை விலக்கல்
8.அகப்பற்று நீக்குதல்
ஆகிய 8 தலைப்புுகளில் உள்ளடக்கியது.

இவற்றில் பாம்பை கொண்டு மனத்தை உருவகபடுத்தி இரண்டையும் ஒருங்கே சேரும்் வண்ணம் பாடல்களை பாடியுள்ளார்் சித்தர் பெருமான். ஆகவே பாம்பைை உவமையாக கொண்டு் மனதை வரு்ணித்து விளக்கியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர் பெருமான்.

பாடல்களும் விளக்கங்களும் பின்வரும் பதிவுகளில்் தொகுத்திருக்கிறேன் பிழைகள் இருந்தால் தவறை திருத்தி கொள்ள உள்ளீடுகள் (comments) வழங்க கேட்டுு கொள்கிறேன்.


                                   - சித்தர் சீடன். 

1 comment:

  1. EXCELLENT....I OWE MUCH TO YOU....GURUVE SHARANAM....

    ReplyDelete